வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது ”பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் 9வது சீனா-தெற்காசிய கண்காட்சி மற்றும் 6வது சீனா-தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில்” இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அருண் ஹேமசந்திர கலந்துகொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.