தொழில்நுட்பத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்குறைப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், இணையவழி வணிக நிறுவனமான அமேசான் (Amazon), நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஆட்குறைப்புகளை அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் செவ்வாய்க்கிழமை (28) முதல் புதிய சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றும், இது அதன் நிறுவனப் பணியாளர்களுக்கு மிகப்பெரிய குறைப்பாகும் என்றும் கூறப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில், நிறுவனம் இதேபோன்ற வேலைக் குறைப்புகளை அறிவித்தது.
இதன் விளைவாக 27,000 க்கும்மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பணிநீக்கங்கள் குறித்து தெரிவிக்கும் என்று CNBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே அறிக்கையில், நிறுவனப் பிரிவுகளில் சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, செலவினங்களைக் குறைப்பதற்கும், கொவிட் தொற்றுநோயின் தேவை அதிகரித்தபோது ஏற்பட்ட அதிகப்படியான பணிநீக்கத்தை சரிசெய்வதற்கும் நோக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது.
30,000 என்ற எண்ணிக்கை அமேசானின் மொத்த 1.55 மில்லியன் பணியாளர்களில் ஒப்பீட்டளவில் சிறிய பகுதியாக இருந்தாலும், இது நிறுவனத்தின் கார்ப்பரேட் ஊழியர்களில் குறிப்பிடத்தக்க 10% பங்காகும்.
இருப்பினும், அமேசானிடமிருந்து இன்னும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளிவரவில்லை.



















