2026 ஆம் ஆண்டு முதலாம் தரம் முதல் புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்துவதைத் தொடங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் இன்று (29) நடைபெறவுள்ளது.
2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் இந்த பெரிய கல்வி சீர்திருத்தம், தற்போதைய தேர்வு சார்ந்த முறையை மாற்றுவதற்கு, மாற்றத்தை ஏற்படுத்தும், மாணவர்களை மையமாகக் கொண்ட மற்றும் நடைமுறை கற்றல் அணுகுமுறையில் கவனம் செலுத்தியுள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்தல், தொழிற்கல்விப் பயிற்சியை முன்கூட்டியே அறிமுகப்படுத்துதல் மற்றும் பாடத்திட்டத்தை நவீனமயமாக்குதல் ஆகியவற்றை இந்த சீர்திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இதேவேளை, நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகள் அரச உதவி பெறும்/ உதவி பெறாத தனியார் பாடசாலைகளில் 2026 ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு இன்று ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













