• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம்

Hanushya P by Hanushya P
2026/01/30
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறக்கோரி கொழும்பில் உள்ள நீதி அமைச்சிற்கு முன்பாக இன்று பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சிவில் அமைப்புகள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டம், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய அரசியல் அழுத்தமாக அமைந்தது.

போராட்டத்தின் போது, “அடக்குமுறைச் சட்டங்கள் ஜனநாயகத்தின் எதிரிகள்” என்றும், “மக்களை ஒடுக்கும் எந்தவொரு சட்டமூலமும் நாட்டிற்குத் தேவையில்லை” என்றும் போராட்டக்காரர்கள் மும்மொழிகளிலும் முழக்கமிட்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருட் தந்தை சக்திவேல், ‘ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவதாக NPP அரசாங்கம் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை மறந்து, அவர்களினால் தற்போது கொண்டுவரப்படும் PSTA சட்டமூலமானது பழைய PTA சட்டத்தை விடவும் ஆபத்தானது என்று குற்றம் சாட்டினார்.

இந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் கைகோர்த்து நின்றமை, இந்தச் சட்டங்களுக்கு எதிராக நிலவும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தியது.
போராட்டத்தில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்ட தரப்பினர் தமது தனிப்பட்ட வலிகளையும் கோரிக்கைகளையும் பதாகைகள் மூலம் வெளிப்படுத்தினர்.

2009ஆம் ஆண்டு மட்டக்குளிப் பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ‘முகமது ஹக்கிம்’ என்ற இளைஞனின் தாயார், தனது மகனுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கோரி ஏந்தியிருந்த பதாகை காண்போரை நெகிழச் செய்தது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள PTA சட்டமானது சிறுபான்மையினருக்கும், அரசியல் எதிர்ப்பாளர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், புதிய பெயரில் மீண்டும் ஒரு கருப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

நீதி அமைச்சிற்கு முன்னால் திரண்டிருந்த மக்கள், மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும், அடிப்படை உரிமைகளையும் முடக்கும் இத்தகைய சட்டமுயற்சிகளை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஒருமித்த குரலில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்

Related

Tags: Massive protestMinistry of Justice!ptareligious leaders
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் வர்த்தகத்தை தொடங்கிய லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச்!

Next Post

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தீர்ப்பு ஒத்திவைப்பு

Related Posts

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்
கிழக்கு மாகாணம்

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

2026-01-30
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!
இலங்கை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

2026-01-30
பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், போதுமானதாக அமையவில்லை
இலங்கை

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், போதுமானதாக அமையவில்லை

2026-01-30
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தீர்ப்பு ஒத்திவைப்பு
இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தீர்ப்பு ஒத்திவைப்பு

2026-01-30
கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!
இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!

2026-01-30
கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில்!
இலங்கை

கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில்!

2026-01-30
Next Post
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தீர்ப்பு ஒத்திவைப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் - தீர்ப்பு ஒத்திவைப்பு

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், போதுமானதாக அமையவில்லை

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், போதுமானதாக அமையவில்லை

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

0
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

0
மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

0
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

0
இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

0
ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

2026-01-30
மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

2026-01-30
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

2026-01-30
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

2026-01-30
இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

2026-01-30

Recent News

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

2026-01-30
மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

2026-01-30
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

2026-01-30
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

2026-01-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.