நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ பரவல் நேற்று இரவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலின் போது எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















