உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் உலகளாவிய 2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடும் கண்காட்சியும் இன்று (16) புது டெல்லியில் தொடங்குகிறது.
ஐந்து நாள் AI தாக்க உச்சிமாநாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைப்பார்.
இந்தக் கண்காட்சி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தொடக்க நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் சர்வதேச கூட்டாளர்களை ஒன்றிணைக்கும்.
இந்த கண்காட்சியில் 13 நாடுகளின் அரங்குகளும் இடம்பெறும், இவை AI சுற்றுச்சூழல் அமைப்பில் சர்வதேச ஒத்துழைப்பை வெளிப்படுத்துகின்றன.
அவுஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, ஐச்சிய இராஜ்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, செர்பியா, எஸ்டோனியா, தஜிகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அரங்குகள் இதில் அடங்கும்.
சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 2.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















