• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

Hanushya P by Hanushya P
2026/02/24
in சினிமா
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார் என்று ‘தாய் கிழவி’ விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார்.

சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெப்ரவரி 27-ம் திகதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிவிட்டு சிவகார்த்திகேயன், “இயக்குநர் சிபிக்கு நன்றி. தலைவர் ரஜினி பட இயக்குநர் நீங்கள், இவ்வளவு நேரம் இருந்து விழாவை சிறப்பித்தற்கு நன்றி. நாம் இருவரும் தான் சுதனுடன் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தது. என்னை விட்டுவிட்டு நீ மட்டும் தப்பித்துவிட்டாய்.

நான் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன். நமக்கான ஒப்பந்தம் இருக்கிறது, மீண்டும் வரவேண்டும். சூரி அண்ணனுக்கு நன்றி. 30 ஆண்டுகள் கழித்துக் கூட ராதிகா – ஸ்ரீப்ரியா நட்பு மாதிரி நமது நட்பு இருக்க வேண்டும். இன்று நீங்கள் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறீர்கள்.

சினிமாவில் ஏதேனும் ஒரு ரோலில் நடித்து விட வேண்டும் என்று வந்தவன் நான். அப்படியே ஹீரோ வாய்ப்பு வந்தது. மக்கள் கைதட்டி வெற்றி நாயகன் என்று சொன்னவுடன், நான் நல்லாயிருப்பதை தாண்டி நண்பர்களுக்கு ஏதேனும் பண்ண வேண்டும் என தோன்றியது.

அப்படி நண்பன் அருண்ராஜா காமராஜ்க்காக ஆரம்பிக்கப்பட்டது தான் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ். பெண்கள் மிகவும் வலிமை மிக்கவர்கள் என்பதை சொல்ல வேண்டும் என உருவாக்கப்பட்டது தான் ’கனா’. உலகில் முதன்முதலாக பெண்கள் கிரிக்கெட்டை மையாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது.

அடுத்து யூடியூப் நபர்கள் நிறைய பேர் சினிமாவுக்கு வர விரும்பினார்கள். அவர்களில் ஒருவரான கார்த்திக் வேணுகோபாலை வைத்து ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தை தயாரித்தேன். அதனைத் தொடர்ந்து ‘வாழ்’, ‘டாக்டர்’, ’டான்’ என படங்கள் பண்ணினோம். ’குரங்கு பெடல்’ என்ற படத்தினை வழங்கினோம்.

அந்தப் படத்தை இப்போதும் நிறைய பள்ளிக்கூடங்களில் திரையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘கொட்டுக்காளி’ படத்தை கமர்ஷியல் விஷயங்களுக்காக பண்ணவில்லை. பி.எஸ்.வினோத்ராஜ் என்ற இயக்குநரை கொண்டாட வேண்டும் என்பதற்காக பண்ண படம் அது. அந்தப் படத்தின் வெற்றியை நிறைவாக உணர்ந்துள்ளேன். இன்னும் அதே மாதிரி நிறைய படங்கள் வரும். அடுத்து ’தாய் கிழவி’ படம்.

’தாய் கிழவி’ கதையைக் கேட்டவுடன், இதை பண்ண வேண்டும் என முடிவு பண்ணினேன். இந்தப் படத்தில் நடித்த அத்தனை பேருமே ஸ்டார்ஸ் தான். அப்போதே 2 படத்துக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டோம். அனைவருமே ‘தாய் கிழவி’ பார்த்துவிட்டு ‘சேயோன்’ வாய்ப்பு கொடுத்துள்ளார் என நினைக்கிறார்கள். அப்படியல்ல, அவரிடம் கதைக் கேட்ட அன்றே அவரது 2-வது படத்தின் ஹீரோ நான் என முடிவு செய்துவிட்டேன்.

’தாய் கிழவி’ இயக்குநர் சிவாவிடம் இருக்கும் நேர்மை எனக்கு ரொம்ப பிடிக்கும். கமல் சார் இப்படத்தை பார்த்துவிட்டு, இதில் நிறைய நட்சத்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள் என்று சொன்னார். இதில் உள்ள கதாபாத்திரத்தை ராதிகா மேடத்தை தவிர நடிப்பதற்கு இந்தியாவில் ஆளே இல்லை. இயக்குநர் சிவாவுக்கு இன்னும் நிறைய வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது.

’சேயோன்’ படத்துக்கு அடுத்த படமும் சிவாவுடன் தான் பயணிக்கப் போகிறேன். ஒரு தயாரிப்பாளராக ‘தாய் கிழவி’ எங்களுக்கு லாபகரமான படம் தான். அனைவருமே ஏதேனும் நல்லது செய்துவிட வேண்டும் என்ற கனவோடு தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

எனக்கு கிடைக்கும் பணத்தை வைத்து முடிந்த அளவுக்கு நல்லது பண்ணிக் கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த இடத்தைக் கொடுத்த திரையுலகிற்கு ஏதேனும் பண்ணனும் என்று தான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.

யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் தாண்டிப் போகவோ, யாரையும் எதிர்க்கவோ, யாரையும் காலிப் பண்ணவோ நான் வரவில்லை. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதை செய்ய விடுங்கள் என்று தான் கேட்டுக் கொள்கிறேன். இதுவரை ரீமேக் படங்கள் செய்ததில்லை, கதை கேட்டு படங்கள் பண்ணுகிறேன்.

எனது படங்கள் வெற்றி, தோல்விக்கு நான் பொறுப்பு என நம்புகிறேன். மக்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகளை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார். அந்த தடைகளை நீக்கிவிட்டால் இன்னும் நான்கு சிவகுமார் முருகேசனை கூட்டிக் கொண்டு வருவேன்” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.

Related

Tags: February 27film industrySivakarthikeyanThai Kishavi’w
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

Next Post

“மூன்றாம் உலகப் போரை புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்” – ஸெலன்ஸ்கி

Related Posts

வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!
சினிமா

வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!

2026-02-24
வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!
சினிமா

வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

2026-02-23
மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி
சினிமா

மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

2026-02-23
சூர்யா நடிக்கவுள்ள படத்தினை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து
சினிமா

சூர்யா நடிக்கவுள்ள படத்தினை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து

2026-02-18
பெப்ரவரி 26, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா  திருமணம்
சினிமா

பெப்ரவரி 26, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்

2026-02-17
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சேயோன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது
சினிமா

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சேயோன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது

2026-02-17
Next Post
“மூன்றாம் உலகப் போரை புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்” – ஸெலன்ஸ்கி

“மூன்றாம் உலகப் போரை புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்” – ஸெலன்ஸ்கி

தனியார் வசமாகும் மின்சார சபை?

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தாமதம்!

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்!

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
edit post
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
edit post
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
edit post
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
edit post
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
edit post
மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்

மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்

0
edit post
அரசு ஊழியர்களின் 4 நாள் வருகை: போதுமான இடவசதி உள்ளதா? கனடா திறைசேரி சபை விளக்கம்!

அரசு ஊழியர்களின் 4 நாள் வருகை: போதுமான இடவசதி உள்ளதா? கனடா திறைசேரி சபை விளக்கம்!

0
edit post
கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு டிராக்டர்கள் பயன்படுத்துவது முற்றாக தடை – பிரதி அமைச்சர் திட்டவட்டம்!

கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு டிராக்டர்கள் பயன்படுத்துவது முற்றாக தடை – பிரதி அமைச்சர் திட்டவட்டம்!

0
edit post
ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், யாழிற்கு விஜயம்!

ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், யாழிற்கு விஜயம்!

0
edit post
புதிய மூன்று நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

புதிய மூன்று நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

0
edit post
மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்

மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்

2026-02-24
edit post
அரசு ஊழியர்களின் 4 நாள் வருகை: போதுமான இடவசதி உள்ளதா? கனடா திறைசேரி சபை விளக்கம்!

அரசு ஊழியர்களின் 4 நாள் வருகை: போதுமான இடவசதி உள்ளதா? கனடா திறைசேரி சபை விளக்கம்!

2026-02-24
edit post
கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு டிராக்டர்கள் பயன்படுத்துவது முற்றாக தடை – பிரதி அமைச்சர் திட்டவட்டம்!

கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு டிராக்டர்கள் பயன்படுத்துவது முற்றாக தடை – பிரதி அமைச்சர் திட்டவட்டம்!

2026-02-24
edit post
புதிய மூன்று நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

புதிய மூன்று நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

2026-02-24
edit post
ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், யாழிற்கு விஜயம்!

ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், யாழிற்கு விஜயம்!

2026-02-24

Recent News

edit post
மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்

மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்

2026-02-24
edit post
அரசு ஊழியர்களின் 4 நாள் வருகை: போதுமான இடவசதி உள்ளதா? கனடா திறைசேரி சபை விளக்கம்!

அரசு ஊழியர்களின் 4 நாள் வருகை: போதுமான இடவசதி உள்ளதா? கனடா திறைசேரி சபை விளக்கம்!

2026-02-24
edit post
கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு டிராக்டர்கள் பயன்படுத்துவது முற்றாக தடை – பிரதி அமைச்சர் திட்டவட்டம்!

கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு டிராக்டர்கள் பயன்படுத்துவது முற்றாக தடை – பிரதி அமைச்சர் திட்டவட்டம்!

2026-02-24
edit post
புதிய மூன்று நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

புதிய மூன்று நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

2026-02-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.