நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
காற்று:
காற்று திசை மாறி வீசும், காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. வரை இருக்கும்.
கடல் நிலை:
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் மிதமானதாக இருக்கும்.















