புனித ரமழான் மாதத்தின் முப்பது நாட்கள் நோன்பினை நிறைவு செய்துள்ள இலங்கை இஸ்லாமியர்கள், தமது ஈகைத் திருநாளாம் ரமழான் நோன்புப் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.
நேற்றையதினம் ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்படாத காரணத்தினால், புனித ரமழான் மாதத்தின் 30 ஆவது நோன்பு பூர்த்தி செய்யப்பட்டது.
இதற்கமைய, இன்று பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல், உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் திறந்தவெளித் திடல்களில் விசேட பெருநாள் தொழுகைகள் நடைபெறுகின்றன.
அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரமழான் பெருநாளை முன்னிட்டுப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.












