கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
ஆட்பதிவுத் திணைக்களத்தில் ஏற்பட்ட திடீர் கணினி அமைப்பு கோளாறு காரணமாக இந்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும், ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இன்று இடைநிறுத்தப்படும்.














