மூன்றாவது முறையாக, ராஜ்யசபா துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் எந்த வேட்பாளரையும் நிறுத்தாத நிலையில், ஹரிவன்ஷ் ராஜ்யசபா துணைத் தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தொடர்ச்சியாக 3வது முறையாக இந்தப் பதவிக்குத் தேர்வாகி உள்ளார்.
இவருக்கு பாராட்டு தெரிவித்து ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசுகையில்,
இது அவர் மீது சபை வைத்துள்ள நம்பிக்கையையும், அனைவரையும் ஒன்றிணைத்து செல்வதற்கான முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது எனவும் இது அவரது அனுபவத்திற்கு கிடைக்கும் மரியாதையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஹரிவன்ஷின் தலைமையில் இந்த அவையின் செயல்பாடு மேலும் வலுப்பெற்று, மிகுந்த செயல்திறன் மிக்கதாக மாறியிருப்பதை நாம் அனைவரும் கண்டுள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ராஜ்யசபாவின் துணைத் தலைவராக ஹரிவன்ஷ் நாராயண் சிங் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி முதல் இருந்து வருகிறார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர், பீஹார் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.















