தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன சந்தியை அண்மித்துள்ள அளுத்கம-மத்துகம சாலை, நீரில் மூழ்கியதன் காரணமாக அப்பகுதியூடான போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (2026.05.13) அப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இலகுரக வாகனங்களுக்கான வெலிபென்ன சந்தியின் பல நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாதிப்பு விபரம்;
- கொழும்பு நுழைவாயில்: இலகுரக வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
- கொழும்பிலிருந்து வரும் வாகன வெளியேறும் வாயில்: இலகுரக வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
- காலியிலிருந்து வரும் வாகன வெளியேறும் வாயில்: இலகுரக வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
- காலி நுழைவாயில்: அனைத்து வாகனப் போக்குவரத்திற்கும் திறந்திருக்கும்.
சாலை நீரில் மூழ்கியுள்ளமையினால், ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், சாரதிகள் நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்பாகவும், முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.














