பிரித்தானிய விமான நிலையங்களில் உள்ள மின்-நுழைவாயில் (e-gate) வசதியைப் பயன்படுத்தும் சிறுவர்களுக்கான வயதுக் கட்டுப்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவிற்கு வரும் பயணிகளின் குடிவரவுச் சோதனைகளை விரைவுபடுத்தும் நோக்கில், எதிர்வரும் ஜூலை 8-ஆம் திகதி முதல் 9 வயதுடைய சிறுவர்களும் மின்-நுழைவாயில்களை (e-gates) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடிந்த நிலையில், தற்போது வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், இதற்கென சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன:
அதன்படி, சிறுவர்கள் குறைந்தது 120 சென்டிமீற்றர் (3 அடி 11 அங்குலம்) உயரம் கொண்டிருக்க வேண்டும்
அவர்கள் கண்டிப்பாக ஒரு பெரியவருடன் (Adult) வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள பர்மிங்காம், ஹீத்ரோ, கேட்விக், மான்செஸ்டர் உள்ளிட்ட 13 முக்கிய விமான நிலையங்களிலும், பிரஸ்ஸல்ஸ் மற்றும் பாரிஸில் உள்ள எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் உள்ள 290-க்கும் மேற்பட்ட மின்-நுழைவாயில்களில் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பிரித்தானியாவின் இலத்திரனியல் பயண அங்கீகார (ETA) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














