மாத்தறை – தலல்ல வீதியில் உள்ள வஜிர வம்ச மாவத்தையில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 40 பயணிகள் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலியிலிருந்து அம்பாறைக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றும், தங்கல்லையிலிருந்து மாத்தறைக்குச் சென்றுகொண்டிருந்த மற்றொரு பேருந்தும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த பயணிகள் மாத்தறை மற்றும் பத்தேகம வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.














