வவுனியா லக்சபானா வீதிக்கு அருகில் வைத்து சுமார் 21 கிலோ 600 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்துடன் இரண்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என பொலிசார் தெரிவித்ததுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த காரில் கொண்டுவரப்பட்ட கஞ்சாவினை மற்றொரு முச்சக்கரவண்டிக்கு மாற்றமுற்றப்பட்ட போது, கைது சம்பவம் இடம்பெற்றது.
இதன் போது கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ 600 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவினை பொலிசார் மீட்டுள்ளதுடன், வாகனத்தையும், முச்சக்கவண்டியையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














