காலை வேளையில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை இருக்கும்.
மன்னார் மற்றும் காங்கேசன்துறை வழியாக புத்தளம் முதல் திருகோணமலை வரையிலும், மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
கடல் நிலை:
மன்னார் மற்றும் காங்கேசன்துறை வழியாக புத்தளம் முதல் திருகோணமலை வரையிலும், மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.













