வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்று (23) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குழந்தை ஒன்றின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபம் ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ள.
இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேற்று மாலை தொட்டகொட, குப்பியவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அதேபோன்று மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













