பிலியந்தல-கொட்டாவ வீதியில், ஒரு வேன்வீதியிலிருந்து விலகிச் சென்று உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
வேனில் பயணித்த ஏழு பேர் காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர் உறங்கிவிட்டதே விபத்திற்குக் காரணம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
வேன் மின் கம்பத்தில் மோதியதைத் தொடர்ந்து அப்பகுதியில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.













