‘மகாராஜா 2’ திரைப்படத்தின் பணிகள் நடைபெற்று வருவதை விஜய் சேதுபதி உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குநர் நிதிலன் சாமிநாதன் ஏற்கனவே தன்னிடம் விவரித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
‘பத்தா’ (Baththa) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தனது அடுத்த கூட்டணி குறித்த தகவலைப் பகிர்ந்துகொண்ட விஜய் சேதுபதி, அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இயக்குநர் எழுதியிருந்த கதை தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறினார்.
‘மகாராஜா’ 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.
இப்படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே விஜய் சேதுபதி நம்பிக்கை கொண்டிருந்தாலும், இது இவ்வளவு பெரிய அளவிலான பார்வையாளர்களைச் சென்றடையும் என்று அவரே கூட எதிர்பார்க்கவில்லை என்பதை இதன்போது அவர் ஒப்புக்கொண்டார்.

















