• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மத்திய அரசின் விடயங்களை பிரதேச சபைகளில் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்- ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா

மத்திய அரசின் விடயங்களை பிரதேச சபைகளில் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்- ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா

Litharsan by Litharsan
2021/04/22
in இலங்கை, பிரதான செய்திகள்
77 1
A A
0
38
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய அரசின் விடயங்களை பிரதேச சபைகளில் பேசி சபையின் நேரத்தை வீணடிக்காதீர்கள் என ஈ.பி.டி.பி.யின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்காகவும் ஒருவர்மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியாலும் பேசுவதை விடுத்து யதார்த்தமான விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பிரதேச சபைகளின் வரையறைக்குள் இருந்து பேசுவதும் அதனை முன்னெடுப்பதுமே சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (வியாழக்கிழமை) சபையின் உதவித் தவிசாளர் நடனசிகாமணி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான மாறுபட்ட செய்தியின் அடிப்படையில் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து கண்டன தீர்மானம் ஒன்று சபையின் எதிர்த் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பிலான விவாதத்தில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனுசியா தெரிவிக்கையில், “இலங்கைக் கடலில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாக கூறப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானது.

அது பலதரப்பட்டவர்களிடம் இருந்து வந்த ஆலோசனைகளில் ஒன்று. அதை தீர்மானமாக அவர் தெரிவிக்கவில்லை. இது தன்னிடம் கொண்டுவரப்பட்ட ஆலோசனை மட்டுமே என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

அத்துடன், நடைமுறைப்படுத்த நினைக்கும் யோசனைகளாக முதலில் உள்ளூர் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்றொழில் அமைப்புக்களிடத்தில் முன்வைத்து, அதுதொடர்பாக விவாதித்து அவர்களிடம் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை என டக்ளஸ் தேவானந்தா உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாதத்தில் ஒரு தடவை கூட்டப்படும் உள்ளூராட்சி மன்ற சபைகளின் கூட்டத்தில் தேவையற்ற இந்த விடயத்தை விவாதத்திற்கு உட்படுத்துவது நேரத்தை வீணடிக்கும் செயலாகவே பார்க்கின்றேன்.

ஊடக செய்திக்காகவும் வாய்ப் பேச்சின் வீரத்தை சபையில் காட்டவதற்காகவும் சபையில் விவாதிக்காது சபையால் மக்கள் நலன்சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பல வேலைத்திட்டங்கள் உள்ள நிலையில் அவை தொடர்பாக ஆரோக்கியமான கருத்துக்களையும் தீர்மானங்களையும் கொண்டுவந்து விவாதிப்பதே சிறந்தது.

அத்துடன் மத்திய அரசின், அதுவும் இரண்டு நாடுகளுக்கிடையிலான ஒரு நீண்டகால விடயத்தை எமது சபையில் கண்டனத் தீர்மானம் எடுப்பதனூடாக தீர்வு காணலாம் என்றால் வேடிக்கையாக உள்ளது.

எனவே, இவ்வாறான நேரத்தை வீணடிக்கும் பேச்சுக்களையும் கண்டனத் தீர்மானங்களையும் விட்டுவிட்டு எமது பிரதேச நலன்ட சார் விடயங்களை ஆலோசியுங்கள் அதுவே பிரதேச சபைக்கும் மக்களுக்கும் சிறந்ததாகும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Douglas Devanandaஅனுசியா ஜெயகாந்த்ஈ.பி.டி.பி.டக்ளஸ் தேவானந்தாவேலணை பிரதேச சபை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நடைபெறும்!

Next Post

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பங்களாதேஷ் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 474-4

Related Posts

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!
இலங்கை

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து
இலங்கை

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!
இலங்கை

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: 134 வெளிநாட்டவர்கள் கைது

2026-03-17
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து  வௌியேறினார் கோட்டா!
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய , சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

2026-03-17
இரவு நேரத் தொழில் பயிற்சிக் கூடங்களை நிறுவத் திட்டம் – அநுர குமார
இலங்கை

ஜனாதிபதியின் விசேட உரை! இன்று இரவு 7.30 மணிக்கு

2026-03-17
Next Post
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பங்களாதேஷ் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 474-4

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பங்களாதேஷ் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 474-4

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

நாட்டில் மேலும் 163 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு: 243 பேர் குணமடைவு!

நாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரித்தது கொரோனா!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

0
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

0
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

0
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

0
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

0

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

2026-03-17
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17

Recent News

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

2026-03-17
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.