• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பொலன்னறுவை, அநுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைக்க நிலம் தருவீர்களா? – கோவிந்தன் கேள்வி

1.309 Views
5 years ago
91 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Litharsan Litharsan
    0 Subscriber

    புத்தரின் சின்னங்களைக் காட்டி நிலங்களை அபகரிக்கும் நீங்கள் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைப்பதற்கு நிலம் தருவீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

    அத்துடன், கல்முனை வடக்கு பிரதேச சபையின் தரமிறக்கமானது கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு பெறுவதற்கா எனவும் அவர் நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போது கேள்வியெழுப்பியுள்ளார்.

    அவர் உரையாற்றுகையில், “நமது நாடு ஒரு சுந்தரத் தீவாகும். இந்து சமூத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முத்து என்பதுடன் உலகுக்கு ஆன்மீக ஒளியைப் பரப்பிய நான்கு மதங்களும் தளைத்தோங்கும் நாடாகும்.

    அத்துடன், மூப்பு, பிணி, சாக்காடு கண்டு தனது இல்லற வாழ்வில் அழகிய இளம் மனைவியையும் துறந்து தனக்கு ராஜபோகம் தரக்கூடிய அரச சுகபோகங்கள் அனைத்தையும் துறந்து உலகுக்கு ஞான ஒளியினை தன் பரிநிர்வாணம் மூலம் ஏற்படுத்திய கௌதம புத்தரின் ஆன்மீக ஒளியின் பெருமையினைப் பின்பற்றும் நாடுமாகும்.

    இந்நிலையில், புத்தரை விசுவாசிக்கும் நாட்டில் மாறிமாறி ஆட்சி செய்த அரச தலைவர்களுக்கு அந்த விசுவாசம் உண்மையாகவே இருக்குமானால், நாட்டில் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விவாதம் ஒன்று ஏன் தேவை?

    இந்த அரச தலைவர்களால் உதட்டளவில் பேசப்படும் பௌத்த தர்மம், தேசாபிமானம் என்பன அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிவராததே இதன் காரணமாகும்.

    இந்த நாட்டில் தற்போது தமிழ் பேசும் மக்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே அரசியல் பழிவாங்கலுக்கு நல்ல உதாரணமாகும்.

    கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை எடுத்துக் கொண்டால், கடந்த 28 ஆண்டுகளாக அந்தப் பிரதேச செயலகம் தனியாக இயங்கிவந்தது.

    40ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டிருக்கும் அந்தப் பிரதேச செயலகம் தற்போது தரமிறக்கப்பட்டதாக அறிகின்றோம்.

    கல்முனை நகரில் அரசியல் செய்யும் அரசியல்வாதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸின் நடவடிக்கையே இதுவாகும். பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டுமே தவிர தரம் இறக்கப்படக் கூடாது. இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் இறக்கப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ், தான் சார்ந்த சமூகத்தில் மரணமானவர்களின் உடலங்கள் எரிக்கப்பட்டிருக்கும் போதே 20ஆவது திருத்தத்துக்கு வாக்களித்து ஆதரவளித்து தனது சமூகத்துக்கே துரோகம் செய்தவர். அவர் இன்னொரு சமூகத்துக்கு உதவி செய்வார் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் தமிழர் – முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழவேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.

    இதேவேளை, வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் பழிவாங்கப்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். அம்பாறையின் பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை வரையில் பல ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில், கௌதம புத்தரின் பௌத்த சின்னங்கள் இருப்பதாகக் அடையாளம் காட்டி நீங்கள் அபகரிக்கின்றீர்கள். எனவே, கடந்த காலங்களில் இந்து மன்னர்கள் வாழ்ந்த, ஆட்சி புரிந்த பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் போன்ற இடங்களில் இந்து சின்னங்கள் இன்னும் இருக்கின்றன. அங்கு நூறு ஏக்கர் காணியைக் கொடுத்து இந்து மத ஸ்தாபனம் அமைக்க உங்களால் இடம் தரமுடியுமா” என்று கோவிந்தன் கருணாகரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

    Related

    Category: இலங்கை கிழக்கு மாகாணம் பிரதான செய்திகள் மட்டக்களப்பு
    Tags: காணி அபகரிப்புகோவிந்தன் கருணாகரம்தொல்பொருள் திணைக்களம்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு டிசம்பர் 25 வரை காலக்கெடு!
    இலங்கை

    காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு டிசம்பர் 25 வரை காலக்கெடு!

    2025-12-01
    வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!
    கிழக்கு மாகாணம்

    வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய மக்களது உதவிக்கரம்!

    2025-12-01
    மீட்பு பணிகளின் போது ட்ரோன் பயன்பாட்டை நிறுத்துமாறு விமானப் படை வலியுறுத்து!
    இலங்கை

    மீட்பு பணிகளின் போது ட்ரோன் பயன்பாட்டை நிறுத்துமாறு விமானப் படை வலியுறுத்து!

    2025-12-01
    மன்னார்-குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,பொருட்கள் அனுப்பி வைப்பு!
    மன்னாா்

    மன்னார்-குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,பொருட்கள் அனுப்பி வைப்பு!

    2025-12-01
    உடைப்பெடுத்தது மாவிலாறு  –  வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மூதுர் நகரம்
    யாழ்ப்பாணம்

    யாழில் பாதிக்கப்பட்டோர் தொகை 50 ஆயிரத்தை நெருங்கியது!

    2025-12-01
    பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!
    இலங்கை

    பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

    2025-12-01
    Next Post
    பொலன்னறுவை, அநுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைக்க நிலம் தருவீர்களா? – கோவிந்தன் கேள்வி

    ஆசிரியர் அடித்ததில் மாணவனுக்கு நடத்த விபரீதம்: இதை மறைக்க பாடசாலை நிர்வாகத்தினர் செய்த காரியம்- யாழில் சம்பவம்!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.