மட்டக்களப்பில் முறையான கழிவகற்றல் திட்டம் இல்லாததால் பாதிக்கப்படும் மக்கள்!

மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி எல்லைப் பகுதியில் ஏறாவூர் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகள் காரணமாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுகாதாரப் பிரச்சினைகளையும் மத வழிபாட்டு தலங்களின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் பல முறைப்பாடுகளை முன்வைத்தும் அதற்கான தீர்வுகள் இன்றுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கழிவகற்றல் திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று வரை ஒரு முறையான கழிவகற்றல் திட்டம் உருவாக்கப்படவில்லை. ஒவ்வொரு பிரதேச சபை ஊடாக கழிவுகள் சேகரிக்கப்படுகின்ற போதும் மாவட்டத்தில் சேகரிக்கப்படும் ஒட்டுமொத்த கழிவுகளையும் மீள் சுழற்சி செய்து முறையாக முகாமைத்துவம் செய்வதற்கான இடமோ அல்லது ஒரு செயற்றிட்டமோ இதுவரை உருவாக்கப்படவில்லை. காலத்திற்கு காலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவதற்கும் அவற்றில் இருந்து பசளை தயாரிப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் கூட்டங்கள் நடைபெற்ற போதும் இதுவரை ஒரு உருப்படியான திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை. இயற்கை வளங்களால் சூழப்பட்டு இயற்கை எழில் கொஞ்சும் பசுமை தாயகமாக விளங்கும் மட்டக்களப்பு மாவட்டம் அதன் கடல் வளம்இ உப்பாறுஇ நன்னீர் வாவிகள் மற்றும் நீர்நிலைகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வாழ்வாதார அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு கிடைக்கும் மீன்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் மட்டுமன்றி உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் அரிய இயற்கை வளங்கள் அனைத்தும் குப்பைகள்இ பிளாஸ்டிக் கழிவுகள், இரசாயன கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நீரியல் உயிரினங்கள் மட்டுமன்றி மனித சுகாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி எல்லைப் பகுதியில் ஏறாவூர் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகள் காரணமாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுகாதாரப் பிரச்சினைகளையும் மத வழிபாட்டு தலங்களின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர். இருப்பினும் நிலையான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்தார்

Read moreDetails

கல்லடி புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள போதை பொருளுக்கு அடிமையானவர் களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட 30 பேர் நேற்றையதினம்...

Read moreDetails

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து – சிறுமி ஒருவர் படுகாயம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை பூங்கா வீதி சந்தையில் இன்று (02) இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளி பாடசாலை சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனை...

Read moreDetails

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (02)  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்ட “ஆயிரம் கிராமங்களில்...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய வெசாக் வார நிகழ்வுகள்

தேசிய வெசாக் வார நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இனஐக்கியத்தினை பேணும் வகையிலும் மாற்று மதங்களில் நம்பிக்கையினை கட்டியெழுப்பும் வகையிலும் மட்டக்களப்பு மாவட்ட...

Read moreDetails

படு*கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினத்தில் ஊடகப் பயிற்சி!

படு*கொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினத்தில் இளைஞர் யுவதிகளுக்கு ஊடகப் பயிற்சி. படு*கொ*லை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின்...

Read moreDetails

கரடியனாறு பிரதேசத்தில் உள்நாட்டு ஷாட்கன் துப்பாக்கியுடன் 26 வயதுடைய விவசாயி கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு தயாரிப்பான ஷாட்கன் ரக துப்பாக்கி ஒன்றுடன் பங்குடாவெளியைச் சேர்ந்த விவசாயி ஒருவரை நேற்று...

Read moreDetails

ஏறாவூரில் மொபைல் போன் தகராறில் தங்கை கொலை – 14 வயது அண்ணன் நன்னடத்தை இல்லத்தில் !

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் தண்ணீர்த் தொட்டியிலிருந்து 11 வயதான சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் 14 வயதுடைய சொந்தச் சகோதரன்...

Read moreDetails

மட்டு கல்குடாவில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் வியாபாரி கைது!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வீடு ஒன்றை நேற்று (30) இரவு முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்து 72...

Read moreDetails

மட்டக்களப்பில் பொசன் பௌர்ணமி தினத்தில் கசிப்பு வியாபார நிலையம் முற்றுகை- ஒருவர் கைது!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமம் மற்றும் திராய்மடு பகுதியில் நீண்டகாலமாகச் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல வியாபாரி ஒருவரை, 27.5 லீற்றர்...

Read moreDetails
Page 1 of 111 1 2 111
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist