• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக இருப்போம் – சஜித்

நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக இருப்போம் – சஜித்

shagan by shagan
2022/01/07
in இலங்கை
93 1
A A
0
49
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

எனது கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன, மத பிரிவினைகள் ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம்  என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”ஐக்கிய  மக்கள் சக்தி என்பது நாட்டில் இதுவரை இல்லாத பொது அரசியல் அத்தியாயத்தை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. டீல் அரசியல் கலாசாரத்தை இல்லாமல் செய்து நாட்டின் எதிர்காலத்திற்கும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்குமான அமைப்பு தான் இது.

இது தனி நபருக்கானதோ அல்லது ஒரு இனத்திற்கானதோ அல்ல. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புபவர்கள் அனைவரும் இணைந்து பயணிக்கின்றார்கள். ஊழல், கொள்ளைகள் இல்லாத ஒரு அரசாங்கத்தை உருவாக்குவது எமது நோக்கம். மத்திய வங்கி கொள்ளையில் ஈடுட்டவர்கள் எவ்வாறு எம்மோடு இணைய வருவார்கள்.

சுசில் பிரேமஜயந்த அவர்களை பதவி நீக்கிய விடயமானது, தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்ற வேலை.

மக்கள் இந்த அரசாங்கத்திற்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. முழுவதும் கண்துடைப்பாக செய்கிறார்கள். இதனை மாற்ற வேண்டும். இதற்கு புதிய மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும். அதற்கான வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கில் எம்மால் கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டமானது மக்களின் பங்களிப்புடன் கூடியதாகவே ஆரம்பிக்கப்பட்டது.

இதனை நாம் நடைமுறைப்படுத்தினோம். தற்போதைய அரசாங்கம் கொள்ளையடிப்பதில்  தான் குறியாக இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு எப்படி வீட்டுத் திட்டத்தை அவர்களால் வழங்க முடியும்.  நாம் இந்த நாட்டின் ஜனாதிபதியாகி இந்த மக்களின் வீட்டு திட்ட பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன்.

மேலும், ஊடகம் என்பது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக இருக்கும் மிகப்பெரிய சக்தி என நான் நம்புகின்றேன். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது ஊடகவியலாளரின் கடமை. இவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் பலர் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.

அவ்வாறு பாதிப்படைந்த அல்லது உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு நாம் ஆட்சிக்கு வந்ததும் அரசாங்கம் என்ற வகையில் எம்மால் முடிந்த சலுகைகளை பெற்றுக் கொடுப்போம்.

ஐக்கிய ஐக்கிய மக்கள் சத்தியின் நாட்டிற்கான பயணம் தொடர்கிறது. இந்த பயணத்தில் வடக்கு அரசியல், தெற்கு அரசியல் என்று இல்லை. இதில் எந்த வித பிரிவினைகளும் கிடையாது. இலங்கை என்பது ஒரு நாடு.

நாம் அதன் பிரஜைகள் என்ற அடிப்படையில் தான் பணியாற்றுவோம். மக்களது பிரச்சனைகளை நாம் கட்டம் கட்டமாக செய்வோம். இதில் எந்தவித வேறுபாடும் கிடையாது.

இராணுவ வழிநடத்தல் அல்லது இராணுவத்தின் தலைமைத்துவம் என்பது இராணுவத்திற்கு தான் பொருத்தம். எமது நாடு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டை வழிநடத்துவதற்கும், கொண்டு செல்வதற்கும் தேவையானது ஜனநாயக ரீதியலான தேர்தலும், மக்களது வாக்குகளும், அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் தான்.

நாட்டின் ஆட்சியில் இராணுவ வழிநடத்தல் என்பது தேவையில்லாதது. இது சம்மந்தமாக என்னிடம் மேலதிகமாக கேட்க வேண்டாம். இந்த அரசாங்கத்திற்கும் நாட்டை இராணுவ ஆட்சியை கொண்டு செல்வது தொடர்பான எண்ணம் இருக்கும் என நான் எண்ணவில்லை.

நாட்டிற்குள் எந்தவித பிரச்சனைகளும் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. எனது கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன, மத பிரிவினைகள் ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம். இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். எந்த ஒரு இனத்துடனும், மதத்துடனும் முரண்பட முடியாது. ஒரு இனம் அல்லது குறித்த தொகை மக்கள் தமக்கு பாதுகாப்பு இல்லை அல்லது தமது தேவைகள் பூர்த்தியாகவில்லை என்றால் அதனை கேட்க உரிமை உள்ளது. அதனை செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை” எனத் தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – டக்ளஸ்

Next Post

நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை மின்தடை – விசேட அறிவிப்பு வெளியானது!

Related Posts

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்
கிழக்கு மாகாணம்

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

2026-01-30
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!
இலங்கை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

2026-01-30
பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், போதுமானதாக அமையவில்லை
இலங்கை

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், போதுமானதாக அமையவில்லை

2026-01-30
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தீர்ப்பு ஒத்திவைப்பு
இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தீர்ப்பு ஒத்திவைப்பு

2026-01-30
அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம்
இலங்கை

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம்

2026-01-30
கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!
இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!

2026-01-30
Next Post
வறட்சியான காலநிலை: சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டு?

நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை மின்தடை – விசேட அறிவிப்பு வெளியானது!

குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

0
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

0
மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

0
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

0
இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

0
ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

2026-01-30
மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

2026-01-30
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

2026-01-30
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

2026-01-30
இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

2026-01-30

Recent News

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

2026-01-30
மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம்

2026-01-30
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

2026-01-30
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

2026-01-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.