தேசிய தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுயாதீன ஆணைக்குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான தகுதியுடைய உறுப்பினர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது பெப்ரவரி 15ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கடந்த மாதம் அரசியலமைப்பு சபை கோரியது.
அரசியலமைப்பின் 41பி பிரிவின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின் கீழ் நியமனங்கள் செய்யப்படவுள்ளன.
அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டமை, தகுதியற்ற நபர்களால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆணைக்குழுக்களில் உறுப்பினர்களாவதற்கு விண்ணப்பித்திருப்பதனால் தெரிவுச் செயற்பாடுகள் சிக்கலானதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவையில் கடந்த மாதம் 21ஆம் திகதி அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானித்துள்ளது.
21வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அரசியலமைப்பு சபையும் மீண்டும் அமைக்கப்பட்டது.















