கடந்த 2018 ஆம் ஆண்டில் நோவிசோக் எனும் விஷத்தால் டான் ஸ்டர்ஜஸ் (Dawn Sturgess) உயிரிழந்தமை தொடர்பாக இங்கிலாந்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணையின் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது.
மரணம் குறித்த ஏழு வார விசாரணையில், முன்னாள் ரஷ்ய உளவாளி செர்ஜி ஸ்க்ரிபால் மீதான “சட்டவிரோதமான மற்றும் மூர்க்கத்தனமான சர்வதேச படுகொலை முயற்சியில் (Dawn Sturgess) டான் ஸ்டர்ஜெஸ் சிக்கியமை கண்டறியப்பட்டது.
அதன்படி, (Sergei Skripal,) செர்ஜி ஸ்க்ரிபாலுக்கு எதிரான படுகொலை முயற்சியில் பயன்படுத்தப்பட்ட இராணுவ தர நரம்பு முகவரிகளைக் கொண்ட ஒரு வாசனை திரவியத்தை அறியாமல் பயன்படுத்தியமையினாலேயே (Dawn Sturgess) டான் ஸ்டர்ஜெஸ் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சம்பவம் குறித்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணையானது, இச்சம்பவங்களின் சூழ்நிலைகளையும், குற்றவாளிகளைக் கண்டறிவதையும், பாடங்களைக் கற்றுக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஸ்டர்ஜஸ் குடும்பத்தின் வழக்கறிஞர், ஸ்க்ரிபாலுக்கு இருந்த அச்சுறுத்தல் வெளிப்படையாகத் தெரிந்திருந்தும், அரசாங்கம் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் முற்றிலும் தவறிவிட்டது என்று கடுமையாக வாதிட்டார்.
மேலும், உள்ளூர் காவல்துறை போதுமான பயிற்சி இல்லாமல் இருந்ததாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதேவேளை, இத்தகைய இரசாயன ஆயுதத் தாக்குதலைத் தடுக்க இங்கிலாந்து அரசாங்கம் தவறியதா என்ற முக்கியமான கேள்வி மக்கள் மத்தியில் இந்த வழக்கு எழுப்புகிறது.














