அக்மீமன பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது பதின்ம வயது மகனும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்மீமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனகமுவவில், பின்னதுவ அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புப் பகுதியிலிருந்து வெளியேறி காலி நோக்கிச் சென்ற கார் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த பயங்கர மோதல் ஏற்பட்டது.
விபத்தினை அடுத்து மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பின்னால் பயணித்தவர்கள் இருவர் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது சாரதியும், பின்னால் பயணித்த ஒருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் வலஹந்துவ பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 36 வயது தந்தை மற்றும் அவரது 16 வயது மகன் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.













