யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு சுப்பர் மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை சங்க தலைவர் மு.சிவகுமார் தலமையில் சுப்பர் மடத்தில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
சுப்பர்மடம் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய பிரதமகுருக்கள் பிரம்மஸ்ரீ சோ.துஸ்யந்தகுருக்கள் ஆசியுடன், சிறப்பு வழிபாடுகளுடன் முதல் அடிக்கல்லினை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி,
நீரியல் வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கிருஸ்ணன் அகிலன், வடமராட்சி வடக்கு, பிரதேச செயலாளர் நடராசா திருலிங்கநாதன், பருத்தித்துறை கிழக்கு கடற்றொழில் பரிசோதகர், மரியதாஸ் நாகேந்திரன், பருத்தித்துறை நகரபிதா விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் உட்பட பலரும் நாட்டிவைத்தனர்.
இந்நிகழ்வில் சுப்பர்மடம் கிராம மக்கள், கடற்றொழிலாளர்கள், என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
















