வரலாற்று சிறப்புமிக்க. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் இன்று (15) கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2026 மகோற்சவ பெருவிழாவில் இன்று காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான் துர்க்கை அம்மன் முருகப்பெருமான் ஆகியோருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் இருந்து மூர்த்திகள் கொடிக் கம்பத்திற்கு எழுந்தருளி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம் இன்று காலை 10.00 மணிக்கு இனிதே நடைபெற்றது
12 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோசவத்தில் பத்தாம் நாள் திருவிழாவாக எதிர்வரும் 24 ஆம் தேதி சப்பறத் திருவிழாவும் 11ஆம் நாள் திருவிழாவாக எதிர்வரும் 25 ஆம் தேதி ரத உற்சவமும் 12-ஆம் நாள் திருவிழாவாக எதிர்வரும் 26ஆம் தேதி தீர்த்த உற்சவமும் சிறப்பாக நடைபெற உள்ளது
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவ்வாலய மகோற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்






