புசல்லாவை நயாப்பனை லோவர் டிவிசன் மற்றும் மேமலை அட்டபாகை தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை சம்பளம் 1750 ரூபா உயர்த்தி கொடுத்தற்க்கு ஜனாதிபதிக்கு நன்றிகள் தெரிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
1750 ரூபா தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்ததற்க்கு இன்று புசல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள் செய்து பாற்சோறு சமைத்து கேக் வெட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தி கொண்டனர்
இந்த நிகழ்வில் தோட்ட மக்கள் இளைஞர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தி கம்பளை நகரசபை உறுப்பினர் திருகுமரன் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டு இருந்தனர் .













