மருத்துவர்களின் சட்டவிரோத இடமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (31) காலை 8 மணிக்கு நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள,
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச,
நாடு தழுவிய அனைத்து வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்தம் தொடங்கும்.
எனினும், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மகாரகமவில் உள்ள அபேக்ஷா வைத்தியசாலை, சிறப்பு சிறுநீரகப் பிரிவுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகியவற்றில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படாது.
தங்கள் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கத் தவறினால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.












