இன்று வெளியாக இருந்த நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் காலை காட்சிகள் தமிழகம் உள்பட பல பகுதிகளிலும் இரத்து செய்யப்பட்டிருக்கின்றது.
தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபுவுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் இடையேயான கடந்த கால நிதிப்பிரச்னையே இதற்கு காரணமாம்.
இந்த நிலையில் கருப்பு திரைப்படத்திற்காக விநியோகிஸ்தர்களிடம் கடனாகப் பெறப்பட்ட தொகை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய முந்தைய நிலுவைத் தொகை, கைதி – 2 படத்திற்காக பெறப்பட்ட உரிமங்களுக்கான முன்தொகை என கிட்டதட்ட ரூ. 95 கோடி வரை தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு பிரபல திரைப்பட விநியோகிஸ்தர்களான திருப்பூர் சுப்ரமணியன், மதுரை அன்புச்செழியன், ஜஸ்வந்த் பண்டாரி உள்ளிட்டோருக்கு கொடுக்க வேண்டியுள்ளதாம்.
நீண்ட காலமாக இதுகுறித்து இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்துள்ளன.
ஆனால், எஸ். ஆர். பிரபு கடனைச் செலுத்தாமல் தாமதித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தை வெளியிடாமல் காட்சிகளை ரத்து செய்துள்ளதால் நடிகர் சூர்யாவே இப்பிரச்னைக்குத் தீர்வு காண மொத்த தொகையையும் செலுத்த முன் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்துவதற்கு அவகாசம் எடுப்பதாலேயே மாலை வரை காட்சிகள் இரத்தாகியுள்ளதாகத் தெரிகின்றது.

















