இந்தியக் கடற்படையின் ‘ஐஓஎஸ் சாகர்’ (IOS Sagar) திட்டத்தின் கீழ், ஐஎன்எஸ் சுனைனா (INS Sunayna) போர்க்கப்பல் 16 நாடுகளைச் சேர்ந்த பல்தேசியக் குழுவினருடன் நாளை (15) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இந்தக் கப்பலில் இலங்கை, பங்காளதேஷ், இந்தோனேசியா, மலேசியா, மாலைத்தீவு, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 16 நாடுகளின் கடற்படை அதிகாரிகள் இணைந்துள்ளனர்.
இந்தியக் கடற்படை பயிற்சி நிறுவனங்களில் கூட்டுத் துறைமுகப் பயிற்சிகளை முடித்த இந்த அதிகாரிகள் குழு, கடந்த ஏப்ரல் 02-ஆம் திகதி மும்பையிலிருந்து இப்பயணத்தை ஆரம்பித்தது.
கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு விசேட பயிற்சிகள் இந்தப் பயணத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன:
இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இந்தியக் கடற்படை அதிகாரிகள் மற்றும் பல்தேசியக் குழுவினர் இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படை பிராந்தியத் தளபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
இந்த விஜயமானது பிராந்திய கடல்சார் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும், கடல்சார் பங்காளிகளுக்கு இடையே ஆழமான உறவையும், ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்கும் ஒரு பாலமாக அமையும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது ஐஎன்எஸ் சுனைனா கப்பல் தனது பயிற்சியின் பின்னர் மேற்கொள்ளும் ஏழாவது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.














