போலந்துடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், நவீன பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இங்கிலாந்துக்கு பெரிதும் உதவும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான தயாரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (27) லண்டனில் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்கை சந்திக்கவுள்ளார்.
இந்த ஒப்பந்தம், பிரிட்டனின் எல்லைகளைப் பாதுகாத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் கூட்டுப் பாதுகாப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒத்துழைப்பையும் ஆழப்படுத்துகிறது.
இரு நாடுகளும், குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து, அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியுடனும் இதேபோன்ற ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.















