மெதகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்புக்கன் ஓயா நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் ரத்தனதெனியாவைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது தாயார் மற்றும் பல உறவினர்களுடன் கும்புக்கன் ஓயாவில் நீராடிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மெதகம வைத்தியசாலையின் பிரத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














