மறைந்த ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில், இந்திய அரசாங்கத்தின் சார்பில் பிஹார் மாநில ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானிய இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்தச் செய்தியின்படி, இறுதிச் சடங்கில் பங்கேற்கும் இந்த இந்தியக் குழுவில் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் இடம்பெறவுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் மிக முக்கிய ஆன்மீகத் தலைவரின் மறைவையொட்டி, அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான் சர்வதேசத் தலைவர்கள் பலருக்கும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, இந்த இறுதிச் சடங்கில் நேரில் பங்கேற்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் முன்னதாகவே அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தியா தவிர சீனா, ரஷ்யா, கத்தார், பிரான்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.













