பிரான்ஸ் அணி சுவீடனை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
நியூயார்க்-நியூ ஜெர்சி மைதானத்தில் செவ்வாயன்று (ஜூன் 31) நடைபெற்ற இந்தப் போட்டியில், கைலியன் எம்பாப்பே இரண்டு கோல்களும், பிராட்லி பார்கோலா ஒரு கோலும் அடித்து சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேர பிரான்ஸ் அணிக்கு வழிவகுத்தனர்.
இந்த கோல்களின் உதவியுடன் ஃபிஃபா உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் கைலியன் எம்பாப்பே தனித்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
எம்பாப்பேயின் இந்த இரண்டு கோல்கள் அவரது உலகக் கிண்ண கோல் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தியது.
இதன் மூலம் அவர் தற்போது மிரோஸ்லாவ் க்ளோஸை விட இரண்டு கோல்கள் முன்னிலையிலும், லியோனல் மெஸ்ஸியை விட ஒரு கோல் மட்டுமே பின்தங்கியும் உள்ளார்.
வரும் நாட்களில், முன்னணியில் உள்ள இந்த இருவருக்கும் இடையே மேலும் தரவரிசையில் மாற்றங்கள் ஏற்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
குழுச் சுற்றில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உற்சாகத்துடன், பிரான்ஸ் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் அபாரமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
1998 மற்றும் 2018 உலகக் கிண்ண வெற்றியாளர்களான இவர்கள், போட்டியின் இடைவேளைக்கு முன்னதாகவே கோல் கம்பத்தை நோக்கி 15 முறை பந்தை உதைத்துத் தாக்கினர்.
இதில் எம்பாப்பேவின் ஒரு முயற்சி ‘ஆஃப்-சைட்’ (offside) விதிமீறலால் இரத்து செய்யப்பட்டது, மற்றொரு முயற்சி கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது.
மைக்கேல் ஒலிஸேயும் கோல் அடிக்கும் வாய்ப்புக்கு மிக அருகில் வந்தார்; அவரது அற்புதமான ‘ஓவர்ஹெட் கிக்’ (overhead kick) முயற்சி கோல் கம்பத்தின் சட்டகத்தில் மோதித் திரும்பியது.
அவர்களின் இடைவிடாத அழுத்தம் இறுதியாக பாதி நேர ஆட்டத்தின் முடிவில் பலனளித்து மூன்று கோல்களுடன் வெற்றியையும் பெற்றுத் தந்தது.
ஜூலை 4-ஆம் திகதி பிலடெல்பியா அரங்கில் நடைபெறும் 16 ஆவது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ், பராகுவேயை எதிர்கொள்ளும்.
இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் தலைவரான எம்பாப்பே தனது கோல் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு பெறுவார்.














