2025 ஆம் ஆண்டிற்கான கட்டாய நிதி அறிக்கையின்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு கிரிப்டோகரன்சி (மின்னிணயல் நாணயம்) வணிக நடவடிக்கைகளின் மூலம் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளார்.
அமெரிக்க அரசு நெறிமுறைகள் அலுவலகத்திடம் (U.S. Office of Government Ethics) சமர்ப்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான அவரது வருடாந்திரத் தகவல் அறிக்கையின்படி, அவரும் அவரது மகன்களும் இணைந்து தொடங்கிய ‘வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல்’ (World Liberty Financial) எனும் கிரிப்டோ நிறுவனத்திடமிருந்து அவரது நிறுவனங்கள் சுமார் 800 மில்லியன் டொலர் வருவாயைப் பெற்றுள்ளன.
ஜனாதிபதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளும் இந்த வருவாயில், கிரிப்டோ டோக்கன்களின் விற்பனை மூலம் கிடைத்த 520 மில்லியன் டொருக்கும் அதிகமான தொகையும், ‘வேர்ல்ட் லிபர்ட்டி’ வணிகத்தில் உள்ள பங்குகள் அல்லது உரிமைகளை விற்றதன் மூலம் கிடைத்த 250 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையும் அடங்கும்.
ட்ரம்ப் தனது ‘ட்ரம்ப் மீம் காயின்கள்’ (Trump meme coins) விற்பனை மூலம் மேலும் 635 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கிரிப்டோ நாணயங்கள் ஜனாதிபதியின் நிதி நிலையை எவ்வாறு மாற்றியமைத்துள்ளன என்பதை இந்தச் செய்தி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உதாரணமாக, ஓராண்டுக்கு முன்பு சமர்ப்பித்த விவர அறிக்கையில் ‘வேர்ல்ட் லிபர்ட்டி’ (World Liberty) டோக்கன் விற்பனை மூலம் 57.35 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அந்தத் தொகை ஒன்பது மடங்காக அதிகரித்துள்ளது.

















