மெக்சிகோ சிட்டி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற போட்டியில் 10 வீரர்களுடன் ஆடிய எக்குவாடோர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலமாக மெக்சிகோ, 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
மழையால் தாமதமான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஜூலியன் குவினோன்ஸ் மற்றும் ரவுல் ஜிமெனெஸ் ஆகியோர் கோல் அடித்தனர்.
இந்த வெற்றியுடன் மெக்சிகோ, ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் நடைபெறும் சூப்பர் 16 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அல்லது கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய அணிகளில் ஒன்றை எதிர்கொள்ளவுள்ளது.
மெக்சிகோ நகரில் நடைபெற்ற மெக்சிகோ மற்றும் எக்குவோடோர் இடையிலான ‘ரவுண்ட்-ஆஃப்-32’ ஆட்டம் செவ்வாயன்று உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு (01:00 GMT) தொடங்கவிருந்தது.
ஆனால், பலத்த மழை மற்றும் மின்னல் காரணமாக அது ஒரு மணி நேரம் தாமதமானது.
எதிரணி வீரர் ஒருவருடனான மோதலின்போது தனது கைகளால் வாயை மூடிக் கொண்டு பேசியதற்காக கூடுதல் நேரத்தின் ஐந்தாவது நிமிடத்தில் பியரோ ஹிங்காபி (Piero Hincapie) ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, எக்குவாடோர் அணி 10 வீரர்களுடன் ஆட்டத்தை நிறைவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.















