இந்திய ஆடவர் தேசிய கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இத்தொடர், 2025–2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாகும்.
முதல் டெஸ்ட் போட்டி காலியில் உள்ள காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் (GICS), இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள சிங்களேஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (SSC) மைதானத்திலும் நடைபெறும்.
இரண்டு போட்டிகளும் காலை 10:00 மணிக்குத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளன.














