எல் நினோ வானிலையால் எதிர்காலத்தில் மின்சாரத் தேவை அதிகரிக்கக்கூடும் என்றும், நீர் ஆதாரங்கள் வற்றுவதால் மின்சார உற்பத்தி குறையக்கூடும் என்றும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளது என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர். கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான விலைகள் குறித்த அறிவிப்பு தொடர்பாக இன்று (24) நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.













