கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெருமளவு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (02) நண்பகல் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சந்தேகநபரிடமிருந்து 4 கிலோகிராம் 170 கிராம் ஹெரோயின் மற்றும் 8 கிலோகிராம் 55 கிராம் மெத்தாம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபாய் பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 38 வயதுடைய சேதவத்தை, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.














