எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியினர் காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டால் ஒவ்வொரு அமெரிக்க வயது வந்தவருக்கும் 5,000 டொலர் உதவித் தொகை வழங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (09) தெரிவித்தார்.
இது, வாக்காளர்களைத் தனது கட்சிக்கு ஆதரவளிக்கச் சம்மதிக்க வைப்பதற்கான ஒரு அசாதாரண முயற்சியாகும்.
ட்ரம்ப் தனது குடியரசுக் கட்சியின் முதலாவது இடைக்கால மாநாட்டில் இக்கோரிக்கையை முன்வைத்தார்.
ஆனால், இந்தத் தொகையை வழங்குவது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்றோ அல்லது அது சட்டப்பூர்வமானதாக இருக்குமா என்றோ உடனடியாகத் தெரியவரவில்லை.
அமெரிக்காவில் சுமார் 270 மில்லியன் வயது வந்தோர் உள்ள நிலையில், இத்திட்டத்தைச் செயல்படுத்த ஏறக்குறைய 1.35 டிரில்லியன் டொலர் செலவாகும்.
அமெரிக்கர்கள் விரும்பாத ஈரான் போர் விடயத்தில் நவம்பர் இடைத் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் மத்தியில் ட்ரம்பின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
















