புகழ்பெற்ற தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (Solomon Pappaiah) வயது முதிர்வு தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று (11) காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 90.
சுமார் ஒரு வாரமாக பாப்பையா சிகிச்சை பெற்று வந்தார்.
மதுரை அமெரிக்கக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியரான பப்பையா, இலக்கியம் மற்றும் சமூகக் கருத்தாடல்களைத் தொலைக்காட்சி வாயிலாகப் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்ததன் மூலம், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பட்டிமன்ற நடுவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
இலக்கியம் மற்றும் கல்வித் துறைகளில் ஆற்றிய பங்களிப்பிற்காக 2021 ஆம் ஆண்டில் அவருக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.
எழுத்தாளர், கவிஞர் மற்றும் பேச்சாளராகவும் அறியப்பட்ட அவர், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தை மேம்படுத்தும் பணிகளில் நெருக்கமாக ஈடுபட்டிருந்தார்.
பாப்பையா மதுரையில் உள்ள ஞானஒளிவுபுரத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இவரது மனைவி ஜெயபாய் முன்னரே காலமானார்; இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
















