• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்

சொந்த மண்ணில் இந்தியாவுக்கு ஏமாற்றம்: இங்கிலாந்து 227 ஓட்டங்களால் அபார வெற்றி!

webdev by webdev
2021/02/09
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 227 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை- சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 578 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 218 ஓட்டங்களையும் சிப்ளி 87 ஓட்டங்களையும் ஸ்டோக்ஸ் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், பும்ரா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா மற்றும் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 337 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 91 ஓட்டங்களையும் வொஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களையும் புஜாரா 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், டொம் பெஸ் 4 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன், ஜொப்ரா ஆர்செர மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 241 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 178 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணிக்கு 420 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது இங்கிலாந்து அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரூட் 40 ஓட்டங்களையும் ஒலீ போப் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில், அஸ்வின் 6 விக்கெட்டுகளையும் நதீம் 2 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 420 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 187 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விராட் கோஹ்லி 72 ஓட்டங்களையும் சுப்மான் கில் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜெக் லீச் 4 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் டோமினிக் பெஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, முதல் இன்னிங்ஸில் 40 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 218 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட ஜோ ரூட் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 13ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.

Related

Tags: இங்கிலாந்து கிரிக்கெட் அணிஇந்தியா அணிடெஸ்ட் போட்டிஜோ ரூட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹைட்டியில் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி: முக்கிய நீதிபதி உட்பட 23பேர் கைது!

Next Post

ஒன்றாரியோவுக்கு தீவிர குளிர் எச்சரிக்கை!

Related Posts

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!
கிரிக்கெட்

தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

2026-03-12
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!
ஆசிரியர் தெரிவு

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!
அமொிக்கா

ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!

2026-03-11
மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!
கிரிக்கெட்

மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!

2026-03-11
Next Post

ஒன்றாரியோவுக்கு தீவிர குளிர் எச்சரிக்கை!

நாட்டுக்குள் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் இரண்டு கொரோனா வைரஸ் சோதனைகள் அவசியம்!

ஈராக்கில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

0
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14

Recent News

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.