இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 47 ஆயிரத்தை கடந்துள்ளது. அந்தவகையில் புதிதாக 47 ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 17 இலட்சத்தை கடந்துள்ளது. அத்துடன் ஒரு கோடியே 12 இலட்சத்து 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 3 இலட்சத்து 70ஆயிரத்து 101 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 277 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 60 ஆயிரத்து 477ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















