• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும்- காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்

1.123 Views
1 week ago
78 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Litharsan Litharsan
    Subscriber

    இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும் என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

    கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவி கனகரஞ்சினி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

    இனப் படுகொலைக்கான சாட்சியங்கள் போதாது என சர்வதேச நிபுணர்களின் கருத்தைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் ஊடக சந்திப்பில் கருத்துத் தெரித்தமை தொடர்பாக ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

    அவர் தெரிவிக்கையில், “குறுகிய காலத்தில் தேசியத்தோடு பயணிக்கின்றவர்களை ஒன்றிணைத்து பேசிக்கொண்டிருந்தோம். அந்தவேளையில் சுமந்திரன் எங்களோடு பேசும்போது எங்களின் உண்மையான தேடல் உள்ளிட்ட விடயங்களை அவருக்குத் தெளிவுபடுத்தியிருந்தோம். ஆனால், அவர் புரிந்துகொண்டும் புரியாததுபோல் நடிக்கின்றார்.

    உண்மையிலேயே சுமந்திரன், ஒரு கட்சி சார்ந்தவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒரு கட்சியினுடைய பேச்சாளராகவும் இருக்கலாம். ஆனால், இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலைக் கடந்து வந்திருந்தால் எங்களுடைய வலிகளும் ஆதங்கங்களும் அவருக்குப் புரிந்திருக்கும்.

    இதேவேளை, ஏற்கனவே நாங்கள் உண்மைச் சாட்சியங்களை முன்வைத்திருக்கின்றோம். ஆதாரங்களுடன் நாங்கள் ஜெனிவா முற்றத்திலே ஆயிரம் கோவைகளைச் சாட்சியங்களுடன் கொண்டுபோய் ஒப்புவித்திருக்கின்றோம்.  சாட்சியங்களாக அங்கு போய் பேசிக்கொண்டும் இருக்கின்றோம். இந்தளவு தெரிந்துகொண்டும் சரியான ஆதாரங்கள், போர்க்குற்ற ஆதாரங்கள் இல்லையென்று சொல்லப்படுகின்றது.

    இந்த வேளையிலே சர்வதேசத்திலே இருக்கின்ற பிரதிநிதிகள், அந்தந்த நாட்டுப் பிரதிநிதிகள் எங்களுக்காக அங்கு குரல் கொடுக்கின்றார்கள். சர்வதேசத்தில் இருக்கின்ற எங்கள் உறவுகள் அங்கே குரல் கொடுக்கின்றார்கள். அவர்கள் மற்றவர்களைப்போல் தப்பினோம் பிழைத்தோம் என்று இருந்திருந்தால் இன்று நாங்கள் சர்வதேசத்தில் போய் பேசியிருக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Category: இலங்கை கிளிநொச்சி பிரதான செய்திகள் வட மாகாணம்
    Tags: இறுதி யுத்தம்இனப்படுகொலைஎம்.ஏ.சுமந்திரன்காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்முள்ளிவாய்க்கால்
    Share14Tweet9Send

    Related Posts

    அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை புத்தாண்டுக்கு பின்னரும் கடைப்பிடிக்க வேண்டும் – பொலிஸ்
    இலங்கை

    அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை புத்தாண்டுக்கு பின்னரும் கடைப்பிடிக்க வேண்டும் – பொலிஸ்

    April 15, 2021
    யாழ். மாநகர சபையின் காவல் படை மற்றும் சீருடை குறித்து விசாரணை- அஜித் ரோஹன
    இலங்கை

    கடந்த 24 மணித்தியாலங்களில் 123 விபத்துக்கள் பதிவு – 10 பேர் உயிரிழப்பு: 77 பேர் காயம்

    April 15, 2021
    அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்- ரணில்
    இலங்கை

    தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்ல தயாராகும் ரணில்!

    April 15, 2021
    பதுளை- பசறை வீதியில் பேருந்து விபத்து : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
    இலங்கை

    யாழில் சகோதரர்கள் இருவர் பயணித்த துவிச்சக்கர வண்டி விபத்து: 8 வயது சிறுவன் உயிரிழப்பு – ஒருவர் காயம்!

    April 15, 2021
    இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு!
    இலங்கை

    இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு!

    April 15, 2021
    கொரோனா வைரஸ் : இந்தியாவின் தற்போதைய நிலைவரம்!
    இலங்கை

    யாழில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி!

    April 15, 2021
    Next Post
    இங்கிலாந்தில் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை கொவிட் சோதனை இலவசம்!

    இங்கிலாந்தில் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை கொவிட் சோதனை இலவசம்!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    MOST POPULAR

    இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

    April 9, 2021
    இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

    இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

    March 25, 2021
    யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

    யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

    April 8, 2021
    சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

    புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

    April 7, 2021
    மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

    மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

    March 28, 2021
    ஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..

    ஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..

    March 28, 2021
    Load More
    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.