• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

வடக்கு கிழக்கு இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் – இரா.சாணக்கியன்

1.497 Views
4 years ago
104 1
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    0 Subscriber

    வடகிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

    மட்டு.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாணசபை தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”சமகால அரசியலிலே மிக முக்கியமான பிரச்சனையாக தமிழ் அரசியல்வாதிகளின் மத்தியிலும்,முஸ்லிம் அரசியவாதிகளின் மத்தியில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்ட விடயம் இப்போதும் பேசும்பொருளாகவும்,மிகவும் சூடாகவும் பேசப்பட்டிருந்தமை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

    கடந்த வாரம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாக தரம் குறைத்து பெயர் மாற்றி சமல் ராஜபக்ஷவின் அமைச்சின் ஊடாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டமையை நாங்கள் அறியக்கூடியதாக இருந்தது.

    இந்தவிடயமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் வஜிர அபேவர்த்தணவிடம் எங்களுடைய தமிழ்தேசிய கூட்டமைப்பு நேரடியாக தெரியப்படுத்தி அதனை கதைத்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிரந்தரமாக ஒரு கணக்காளரை நியமித்திருந்தோம்.கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குரிய கணக்காளர் நியமனம் சம்பந்தமான பிரச்சனை 1993ஆம் ஆண்டு முதல் கணக்காளர் வெற்றிடமாக காணப்பட்டது.

    குறித்த பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமிக்கப்படாமையை முதன் முதலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிமலநாதன் தலைமையில் ஒத்திவைக்கும் பிரேரணையில் நாடாளுமன்றத்தில் கதைத்திருந்தோம்.இதனை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும்,சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பதை மனதளவில் ஏற்றுக்கொண்டார்கள்.

    ஆனால் துரதிஸ்டவசமாக கணக்காளர் கடமையை பொறுப்பேற்பதற்கு முன்னர் சிலரின் சதித்திட்டத்தினால் தடுக்கப்பட்டு கணக்காளர் கடமையை பொறுப்பேற்கவில்லை என்பது கல்முனை மக்களுக்கு மட்டுமன்றி ஒன்றுபட்ட தமிழ்,முஸ்லிம் மக்களுக்கும் கவலையை தந்திருந்தது.அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியும் மாறிப்போய் புதிய அரசாங்கத்தின் ஆட்சியும் வந்துள்ளது.

    தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒத்திவைக்கும் பிரேரணையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழ் அரசியல்வாதிதான் அதை நிறைவேற்றக்கூடாது என்றும்,செய்யக்கூடாது என்றும், காலப்போக்கில் நாங்கள் அதனை செய்வோம் எனக்கூறப்பட்டது.

    இதனால் இப்போது அரசுடன் இணைந்திருக்கும் ஆளும்தரப்பு அரசியல்வாதிகளுக்கு பாதகமான சூழ்நிலை உருவாகலாம் என்பதற்கு இணங்க அன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.

    நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துள்ளோம் என்றும்,கிழக்கிலே தமிழர்,முஸ்லிம்கள் ஒற்றுமைப்படக்கூடாது என்பதற்காகவும்,கிழக்கில் தமிழர்களின் இருப்பு பறிமுதல் செய்யப்படுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்புத்தான் காரணம் என பேசியவர்கள் இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டதற்கு அப்பிரச்சனை சம்பந்தமாக பேசாமல் இருப்பது கவலையளிக்கின்றது.இவ்வாறான அரசியல்வாதிகளை கல்முனை மக்களும்,அம்பாறை மாவட்ட மக்களும் இனியும் நம்பி ஏமாறக்கூடாது என்பதை தெரியப்படுத்துகின்றேன்.

    ஆனால் இன்று நாட்டிலே பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பிரைச்சனைகள் உட்பட பல பிரச்சனைகளில் தமிழர்களும்,முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும்,சமாதானமாகவும் செயற்படுகின்றார்கள்.

    கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்களும்,முஸ்லிம்மக்களும் ஒற்றுமையாக செயற்படுவதை அவதானித்த ஒருசில தமிழ் அரசியல்வாதிகளும்,முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணைந்து தங்களின் குறுகியகால அரசியலுக்காகவும்,தங்களின் அரசியல் வியாபாரத்திற்காகவும்,அரசியல் இருப்பு வீழ்ச்சி காணும் என்பதற்காவும் எடுத்த நடவடிக்கைதான் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் குறைத்து அனுப்பட்ட கடிதமாகும்.இவ்விடயமாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைத்துள்ளேன்.

    மாகாணசபை தேர்தல் நடப்பதற்கான எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.வடகிழக்கு இணைக்கப்பட்டு மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில் நான் போட்டியிடுவேன்” என்றார்.

    Related

    Category: இலங்கை பிரதான செய்திகள்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
    சினிமா

    நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

    2025-05-23
    அந்தமானில் ஏவுகணைச் சோதனை! விமானங்கள் பறக்கத் தடை விதிப்பு!
    இந்தியா

    அந்தமானில் ஏவுகணைச் சோதனை! விமானங்கள் பறக்கத் தடை விதிப்பு!

    2025-05-23
    புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!
    இலங்கை

    புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!

    2025-05-23
    ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள்  யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
    Uncategorized

    ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

    2025-05-23
    ஜெர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார!
    இலங்கை

    ஜெர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார!

    2025-05-23
    அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்!
    இலங்கை

    7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

    2025-05-23
    Next Post
    கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

    குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்தது

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.