• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும்- ஸ்டாலிக்கான வாழ்த்துச் செய்தியில் உருத்திரகுமாரன்

ஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும்- ஸ்டாலிக்கான வாழ்த்துச் செய்தியில் உருத்திரகுமாரன்

Litharsan by Litharsan
2021/05/07
in இலங்கை, பிரதான செய்திகள்
79 1
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக தமிழ் உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன்.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு அனுப்பப்பட்டுள்ள வாழ்த்துக் கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றிபெற்று முதல்வராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பாகவும், ஈழத் தமிழ் மக்கள் சார்பாகவும் உருத்திரகுமாரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐந்து தசாப்தங்கள் அரசியல் பட்டறிவின் வழிநின்று செயற்பட்டதுடன் மத்திய அரசின் எதிர்ப்பையும் எதிர்கொண்டு தி.மு.க. அடைந்துள்ள பெரும் வெற்றியே, ஸ்டாலினின்  ஆளுமைக்குக் கட்டியம் கூறுவதாக உருத்திரகுமாரன் கு்றிப்பிட்டுள்ளார்.

இதேவேளை. இலங்கை தீவின் தமிழர் தேசிய இனப் பிரச்சினையில் ஈழத் தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஏற்படுத்துவதற்கு தமிழகத்தின் புதிய முதல்வரின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழ் தேசிய மாண்பினையும், தமிழர் மரபுரிமையையும், சமூக நீதியையும் நிலைநிறுத்தவும் பண்பாட்டுச் செழுமை மிக்க வாழ்வை வாழ்வதற்குத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்ற மக்களாகத் தமிழர்கள் இருக்கிறார்கள்.

இதேவேளை, இலங்கையில், வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழகத் தமிழ் உறவுகளால் உறுதி செய்யப்பட வேண்டியதொரு சூழலே இலங்கைத் தீவில் தற்போதும் நிலவுகிறது.

எனினும், 2009ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பைத் தடுத்துநிறுத்த முடியவில்லை என்ற வேதனை தி.மு.க.வுக்கும் உள்ளதை நாம் அறிவோம்.

எனவே, தமிழ்நாட்டில் முதல்வராக தாங்கள் பொறுப்பேற்றிருப்கும் இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழரின் நல்வாழ்வுக்காக இயன்ற முயற்சிகளை எடுப்பீர்கள் என தாம் நம்புவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழக அரசின் அமைச்சுத் துறைகளில் ஒன்றாக இதுவரையும் அமைந்திருந்த ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள்’ எனும் துறையை ‘வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை’ எனத் தாங்கள் மாற்றியமைத்திருப்பது எமக்கு நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது.

ஈழத்தமிழ் மக்களையும் மனதிருத்தியே தாங்கள் இந்த மாற்றத்தைச் செய்ததாக எமது மக்கள் கருதுகிறார்கள்.

இந்த அமைச்சின் பணிகளாக உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதும் இந்துப் பெருங்கடல் புவிசார் அரசியலில் தமிழர் காத்திரமான பங்காளர்களாக விளங்க வைப்பதும் அமைய வேண்டும்.

அதற்கான, தங்களது அரசின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து பணியாற்ற ஆயத்தமாக உள்ளது என்பதையும் இவ்விடத்தில் பதிவுசெய்கிறோம்.

அத்துடன், தமிழக சட்டசபையில் அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட தேசிய இனப் பிரச்சினை தொடர்பான ஈழத் தமிழர் மத்தியிலான வாக்களிப்பு, தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை போன்ற விடயங்கள் தற்போது கிடப்பில் உள்ளன.

எனவே, தாங்கள் இவற்றை மீளக் கையிலெடுத்து, இந்த இலக்குகளை எட்டுவதற்கு உதவக்கூடிய தோழமைச் செயற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் எமக்கு உள்ளது.

மேலும், இலங்கையிலும் தமிழகத்திலும் வாழும் ஈழத் தமிழர்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு உறுதுணையான திட்டங்களைத் தாங்கள் முன்னெடுக்க வேண்டும் என விரும்புவதாகவும் தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் இருந்த காலத்தில் ஈழத் தமிழர்கள் விடுதலை அடைந்தார்கள் என்பதனை வரலாறு பதிவு செய்வதாக அமையட்டும் என வி.உருத்திரகுமாரன் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Provisional Transnational Government of Tamil EelamTamilnaduதமிழ்நாடுதி.மு.க.நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்முதல்வல் ஸ்டாலின்விஸ்வநாதன்.உருத்திரகுமாரன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் நாலாம் மாடிக்கு அழைப்பு!

Next Post

நாட்டில் கொரோனா பாதிப்பு 120,000ஐ கடந்தது!

Related Posts

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
இலங்கை

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-13
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!
இலங்கை

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

2025-12-13
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!
இலங்கை

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

2025-12-13
இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்!
இந்தியா

இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்!

2025-12-13
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களை பகிரவேண்டாம் !
இலங்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களை பகிரவேண்டாம் !

2025-12-13
அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!
இலங்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முற்பணம் கொடுப்பனவு!

2025-12-13
Next Post
நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் கொரோனா பாதிப்பு 120,000ஐ கடந்தது!

ஈழத் தமிழர் நல்வாழ்விற்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்!

ஈழத் தமிழர் நல்வாழ்விற்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்!

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

0
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

0
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

0
புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-13
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

2025-12-13
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

2025-12-13
சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

2025-12-13
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

ஒன்டாரியோவில் 15 வயதுடைய நபரை கொலை செய்த குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

2025-12-13

Recent News

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-13
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

2025-12-13
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

2025-12-13
சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

2025-12-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.