• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மக்களுடைய எழுச்சியினால் அரசாங்கத்தை மாற்ற முடியும் – எம்.ஏ.சுமந்திரன்

1.072 Views
8 months ago
74 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Dhackshala Dhackshala
    Subscriber

    மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும் தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

    வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருப்பது ஒரு பக்கத்திலே நடந்துகொண்டிருக்க, சாதாரணமாக இயற்கையாகவே பயிர் செய்துவந்த பிரதேசங்களிலும் பயிர் செய்யவிடாமல் தடுப்பது என்பது மிகவும் மோசமான ஒரு செயற்பாடு.

    எனவே, காலங்காலமாக பயிர் செய்து வந்தவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.

    இந்த நாட்டிலே உணவுப்பஞ்சம் ஏற்பட வேண்டிய தேவையே கிடையாது. செயற்கை இரசாயனத்தை தடை செய்யவேண்டும் என்று திடீரென்று ஓரிரவிலே அதனை தடை செய்கின்ற ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள்.

    நாங்கள் செயற்கை இரசாயனத்திற்கு ஆதரவானவர்கள் அல்ல. இயற்கை முறையில் பயிர் செய்ய வேண்டும்.அது சுகாதாரத்துக்கு நல்லது. நிலத்துக்கு நல்லது. மக்களுக்கும் நல்லது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு நீண்ட காலம் தேவைப்படுகிறது.

    பல நாடுகளிலே இருபது வருடத்திற்கான அந்த மாற்றத்திற்கான கால அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். 20 வருட காலமாக செய்யப்பட வேண்டிய ஒரு மாற்றத்தை ஒரு இரவிலே ஜனாதிபதி திடீரென்று விழித்து அதனை செய்ததனாலே ஏற்பட்டிருக்கிற ஒரு பிரச்சனை தான் இது.

    இந்த தடவை உள்ளூர் பயிர்செய்கையினாலே வருகின்ற உணவு மக்களுக்கு போதாமல் இருக்கப்போகிறது. ஒரு பாரிய பஞ்சம் நாட்டிலே ஏற்பட போகிறது. அதாவது உணவு பற்றாக்குறை ஏற்படப்போகிறது. இதைப்பற்றி நாங்கள் பல தடவை எச்சரிக்கை செய்திருக்கிறோம் அரசாங்கம் பிடிவாதமாக இந்த கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது.

    ஆகையினாலே மக்கள்தான் திரண்டு இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். நாட்டிலே பல பாகங்களிலே இதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. மக்களுடைய எழுச்சியினால்தான் இந்த கொள்கையை மாற்ற முடியும், தேவைப்பட்டால் அரசையும் மாற்ற முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

    Category: இலங்கை பிரதான செய்திகள்
    Tags: எம்.ஏ.சுமந்திரன்வடமராட்சி
    Share13Tweet8Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    யாழில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு !
    இலங்கை

    யாழில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு !

    2022-06-27
    எதிர்காலத்தில் மின்சார கட்டணத்தை டொலரில் செலுத்த வேண்டும் – ஜனக ரத்நாயக்க
    இலங்கை

    எதிர்காலத்தில் மின்சார கட்டணத்தை டொலரில் செலுத்த வேண்டும் – ஜனக ரத்நாயக்க

    2022-06-27
    இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க இது ஒரு சவாலான நேரம் -அமெரிக்கா
    இலங்கை

    இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க இது ஒரு சவாலான நேரம் -அமெரிக்கா

    2022-06-27
    காங்கேசன்துறைக்கும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவை – பாதுகாப்பு அமைச்சு அனுமதி
    இந்தியா

    காங்கேசன்துறைக்கும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவை – பாதுகாப்பு அமைச்சு அனுமதி

    2022-06-27
    மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை – மின்சக்தி அமைச்சு
    இலங்கை

    காஞ்சன விஜயசேகர கட்டாருக்கு பயணம்!

    2022-06-27
    பெட்ரோல் வழங்கவேண்டும் என கோரி இன்று அதிகாலை முதல் போராட்டம்
    இலங்கை

    பெட்ரோல் வழங்கவேண்டும் என கோரி இன்று அதிகாலை முதல் போராட்டம்

    2022-06-27
    Next Post
    கொரோனா தடுப்பூசி : வட இந்திய மக்களுக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

    இந்தியாவில் 108 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.