• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புதிய அரசியலமைப்பு வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிப்போம் – பிரதமர்

புதிய அரசியலமைப்பு வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிப்போம் – பிரதமர்

shagan by shagan
2021/11/23
in இலங்கை, பிரதான செய்திகள்
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய அரசியலமைப்பு வரைவு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று  (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”உலகளாவிய கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாம் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்கினோம். மக்களின் பாதுகாப்பிற்காக நாம் உரிய நேரத்தில் சகல தீர்மானங்களையும் மேற்கொண்டோம் என்பதனை நாம் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

அப்பணியை நிர்வகிப்பதற்காக பிரதமர் அலுவலகம் மேற்கொண்ட பணிகளை நினைவூட்டும் முகமாகவே நான் இவ்விடயத்தை கூறுகின்றேன்.

கொவிட் தொற்றின் ஆரம்பத்தில் எமது அரசாங்கம் அத்தியவசிய சேவைகளுக்காக ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவியது.

அந்த ஜனாதிபதி செயலணியின் ஊடாக பிரதமர் அலுவலகத்திலிருந்து எமது கண்காணிப்பின் கீழ் மக்களின் அத்தியவசிய சேவைகளை நிறைவேற்றுவதற்கும், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு நாளின் 24 மணிநேரமும் பிரதமர் அலுவலகம் செயற்பட்டது என்பதை நாம் உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்.

அத்துடன் நாம் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்தோம். மக்களுக்கு அத்தியவசிய சேவைகள் மற்றும் சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்நின்றோம். வைத்தியர்கள், பாதுகாப்பு படையினர் ஆகியோர் அதற்காக தமது கடமைகளை நிறைவேற்றினர்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது என்பதை நாம் அறிவோம். பெரும்பாலான தொழில்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. கொவிட் தொற்றிலிருந்து வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் இப்போது திட்டமிட்டுள்ளது. அதன்படி குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை உள்ளடக்கிய வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் இம்முறை சமர்பித்தார்.

மக்களின் சார்பிலான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி நாட்டிற்கு தேவை. இந்த கடினமான சூழ்நிலையில் அம்மக்கள் மீண்டெழக் கூடியதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

2019ஆம் ஆண்டில் நாம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரமொன்றையே பொறுப்பேற்றோம் என்பதையும் நினைவுகூர வேண்டும். இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழமை போல் சொந்த அரசியலுக்காக விவாதம் செய்வதை பார்த்தோம். இருப்பினும் எதிர்கட்சிகளின் நேர்மறையான கருத்துகளுக்கு நாம் செவிமடுக்கிறோம். நீங்கள் சாதகமான கருத்துக்களை கூறினால் அவற்றிற்கு செவிமடுக்க நாம் தயாராக இருக்கிறோம். இத்தருணத்தில் நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் கூட்டாக தீர்மானங்களை எடுக்க வேண்டும். மக்களுக்காக அந்த கடமையை நிறைவேற்றுவதற்கு இந்த உயரிய நாடாளுமன்றத்தில் சகல உறுப்பினர்களுக்கும் திறன் உள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான புதிய வணிகங்களைப் பதிவு செய்யும் தொழில்முனைவோரிடமிருந்து நாம் எந்தப் பதிவுக் கட்டணத்தையும் வசூலிக்கப் போவதில்லை. புதிய வர்த்தக சிந்தனைகளுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கட்டியெழுப்ப கைகோர்க்குமாறு எமது நாட்டு இளைஞர்களை அழைக்கின்றோம்.

மேலும் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதற்கும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மக்களுக்கு வாக்குறுதி அளித்தால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஏறக்குறைய 25 வருடங்களாக தீர்க்கப்படாத ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை இந்த வரவு செலவுத் திட்டத்தில் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலத்துக்காக இதையெல்லாம் செய்கிறோம். சவால்களுக்கு மத்தியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எமது முயற்சிகளுக்கு நீங்கள் அனைவரும் ஆதரவளிப்பீர்கள் என நம்புகின்றோம்.

எதிர்க்கட்சிகளின் முன்மொழிவுகள் மற்றும் விமர்சனங்களுக்கு நாங்கள் உன்னிப்பாகக் செவிமடுத்தோம். சில விமர்சனங்கள் நியாயமற்றவை. சில விமர்சனங்களில் ஏதேனும் நியாயம் இருப்பின், அவற்றை நாம் ஏற்று திருத்திக் கொள்ள எந்நேரத்திலும் தயாராக உள்ளோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன். அரசியலமைப்பு பற்றிப் பேசினீர்கள்.

நாம் இப்போது வரைவைத் தயாரித்து வருகிறோம். அதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பித்து விவாதிப்போம் என்பதை நினைவூட்டுகிறேன். எனவே, இந்த விவகாரத்தில் இரகசியமாக எதையும் செய்ய மாட்டோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் என  பிரதமர் தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜெய்பீம் திரைப்படம் : சூர்யா மீது வழக்கு பதிவு!

Next Post

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

Related Posts

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பணி!

2026-04-27
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!
இலங்கை

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

2026-04-27
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

2026-04-27
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!
இலங்கை

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

2026-04-27
மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!
இலங்கை

மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

2026-04-27
இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!
இலங்கை

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

2026-04-27
Next Post
இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

6 பேரின் உயிரிழப்புக்குப் பின்னர் குறிஞ்சாக்கேணி- கிண்ணியாவிற்கு இடையில் பேருந்து சேவை!

6 பேரின் உயிரிழப்புக்குப் பின்னர் குறிஞ்சாக்கேணி- கிண்ணியாவிற்கு இடையில் பேருந்து சேவை!

சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு – 2 நாட்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நிறுத்தம்!

சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு - 2 நாட்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நிறுத்தம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பனி!

0
ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

0
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

0
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

0
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பனி!

2026-04-27
ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

2026-04-27
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

2026-04-27
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

2026-04-27
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

2026-04-27

Recent News

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பனி!

2026-04-27
ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

2026-04-27
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

2026-04-27
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

2026-04-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.